Surah An-Naba (undefined) is the 78th chapter of the Holy Quran. It was revealed in Mecca and contains 40 verses (ayahs). Read it below with the Arabic text, transliteration, and Tamil translation, or open it as interactive flashcards to memorize it verse by verse.
- 78:1
عَمَّ يَتَسَآءَلُونَ
'Amma Yatasaa-aloon
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
- 78:2
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
'Anin-nabaa-il 'azeem
மகத்தான அச்செய்தியைப் பற்றி,
- 78:3
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
Allazi hum feehi mukh talifoon
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
- 78:4
كَلَّا سَيَعْلَمُونَ
Kallaa sa y'alamoon
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
- 78:5
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
Thumma kallaa sa y'alamoon
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
- 78:6
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًۭا
Alam naj'alil arda mihaa da
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
- 78:7
وَٱلْجِبَالَ أَوْتَادًۭا
Wal jibaala au taada
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
- 78:8
وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًۭا
Wa khalaq naakum azwaaja
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
- 78:9
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًۭا
Waja'alnan naumakum subata
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
- 78:10
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًۭا
Waja'alnal laila libasa
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
- 78:11
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًۭا
Waja'alnan nahara ma 'aasha
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
- 78:12
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًۭا شِدَادًۭا
Wa banaina fauqakum sab 'an shi daada
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
- 78:13
وَجَعَلْنَا سِرَاجًۭا وَهَّاجًۭا
Waja'alna siraajaw wah haaja
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
- 78:14
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءًۭ ثَجَّاجًۭا
Wa anzalna minal m'usiraati maa-an saj-jaaja
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
- 78:15
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّۭا وَنَبَاتًۭا
Linukh rija bihee habbaw wana baata
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
- 78:16
وَجَنَّٰتٍ أَلْفَافًا
Wa jan naatin alfafa
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
- 78:17
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًۭا
Inna yaumal-fasli kana miqaata
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
- 78:18
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًۭا
Yauma yun fakhu fis-soori fataa toona afwaaja
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
- 78:19
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًۭا
Wa futiha tis samaa-u fakaanat abwaaba
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
- 78:20
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
Wa suyyi raatil jibaalu fa kaanat saraaba
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
- 78:21
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًۭا
Inna jahan nama kaanat mirsaada
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
- 78:22
لِّلطَّٰغِينَ مَـَٔابًۭا
Lit taa gheena ma aaba
வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
- 78:23
لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًۭا
Laa bitheena feehaa ahqaaba
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
- 78:24
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًۭا وَلَا شَرَابًا
Laa ya zooqoona feeha bar daw walaa sharaaba
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
- 78:25
إِلَّا حَمِيمًۭا وَغَسَّاقًۭا
Illa hamee maw-wa ghas saaqa
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
- 78:26
جَزَآءًۭ وِفَاقًا
Jazaa-aw wi faaqa
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
- 78:27
إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًۭا
Innahum kaanu laa yarjoona hisaaba
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
- 78:28
وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًۭا
Wa kazzabu bi aayaa tina kizzaba
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
- 78:29
وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًۭا
Wa kulla shai-in ahsai naahu kitaa ba
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
- 78:30
فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
Fa zooqoo falan-nazee dakum ill-laa azaaba
"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
- 78:31
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
Inna lil mutta qeena mafaaza
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
- 78:32
حَدَآئِقَ وَأَعْنَٰبًۭا
Hadaa-iqa wa a'anaa ba
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
- 78:33
وَكَوَاعِبَ أَتْرَابًۭا
Wa kaawa 'iba at raaba
ஒரே வயதுள்ள கன்னிகளும்.
- 78:34
وَكَأْسًۭا دِهَاقًۭا
Wa ka'san di haaqa
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
- 78:35
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا كِذَّٰبًۭا
Laa yasma'oona fiha lagh waw walaa kizzaba
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
- 78:36
جَزَآءًۭ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًۭا
Jazaa-am mir-rabbika ataa-an hisaaba
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
- 78:37
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًۭا
Rabbis samaa waati wal ardi wa maa baina humar rahmaani laa yam likoona minhu khi taaba
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
- 78:38
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّۭا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًۭا
Yauma yaqoo mur roohu wal malaa-ikatu saf-fal laa yata kalla moona illa man azina lahur rahmaanu wa qaala sawaaba
ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
- 78:39
ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
Zaalikal yaumul haqqu faman shaa-at ta khaaza ill-laa rabbihi ma-aaba
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
- 78:40
إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًۭا قَرِيبًۭا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
In naa anzar naakum azaaban qareebaiy-yauma yan zurul marr-u maa qaddamat yadaahu wa ya qoolul-kaafiru yaa lai tanee kuntu turaaba
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
About Surah An-Naba
An-Naba, the Tidings, opens Juz Amma by asking what the people are questioning about, then answers with the great news of the Day of Judgment. It points to the earth as a resting place, the mountains as pegs, sleep as rest, and the night as a covering, all signs of a wise Creator who will surely bring the appointed Day.
Themes: The great news, Signs of the Creator, The Day of Judgment, Reflection
Arabic: Uthmani script (Hafs). Translation: Tamil. Recitation: Mishary Rashid Alafasy. See Sources for full attribution.