Surah Al-Mursalat (undefined) is the 77th chapter of the Holy Quran. It was revealed in Mecca and contains 50 verses (ayahs). Read it below with the Arabic text, transliteration, and Tamil translation, or open it as interactive flashcards to memorize it verse by verse.
- 77:1
وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًۭا
Wal mursalaati'urfaa
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக
- 77:2
فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًۭا
Fal'aasifaati 'asfaa
வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
- 77:3
وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًۭا
Wannaashiraati nashraa
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
- 77:4
فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًۭا
Falfaariqaati farqaa
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
- 77:5
فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا
Falmulqiyaati zikra
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
- 77:6
عُذْرًا أَوْ نُذْرًا
'Uzran aw nuzraa
(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
- 77:7
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌۭ
Innamaa too'adoona lawaaqi'
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
- 77:8
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ
Fa izam nujoomu tumisat
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
- 77:9
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ
Wa izas samaaa'u furijat
மேலும், வானம் பிளக்கப்படும் போது-
- 77:10
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
Wa izal jibaalu nusifat
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
- 77:11
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ
Wa izar Rusulu uqqitat
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
- 77:12
لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ
Li ayyi yawmin ujjilat
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
- 77:13
لِيَوْمِ ٱلْفَصْلِ
Li yawmil Fasl
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
- 77:14
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ
Wa maaa adraaka maa yawmul fasl
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
- 77:15
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailuny yawma 'izillilmukazzibeen
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
- 77:16
أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ
Alam nuhlikil awwaleen
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
- 77:17
ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْءَاخِرِينَ
Summa nutbi'uhumul aakhireen
பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
- 77:18
كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
Kazzlika naf'alu bilmujrimeen
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
- 77:19
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailunw yawma 'izil lil mukazzibeen
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
- 77:20
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ
Alam nakhlukkum mimmaaa'im maheen
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
- 77:21
فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍۢ مَّكِينٍ
Faja'alnaahu fee qaraarim makeen
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
- 77:22
إِلَىٰ قَدَرٍۢ مَّعْلُومٍۢ
Illaa qadrim ma'loom
ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.
- 77:23
فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ
Faqadarnaa fani'mal qaadiroon
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
- 77:24
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailuny yawma 'izil lilmukazzibeen
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
- 77:25
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا
Alam naj'alil arda kifaataa
பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
- 77:26
أَحْيَآءًۭ وَأَمْوَٰتًۭا
Ahyaaa'anw wa amwaataa
உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
- 77:27
وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍۢ وَأَسْقَيْنَٰكُم مَّآءًۭ فُرَاتًۭا
Wa ja'alnaa feehaa rawaasiya shaamikhaatinw wa asqainaakum maaa'an furaataa
அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
- 77:28
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailuny yawma 'izil lilmukazzibeen
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
- 77:29
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Intaliqooo ilaa maa kuntum bihee tukazziboon
"நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
- 77:30
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّۢ ذِى ثَلَٰثِ شُعَبٍۢ
Intaliqooo ilaa zillin zee salaasi shu'ab
மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.
- 77:31
لَّا ظَلِيلٍۢ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ
Laa zaleelinw wa laa yughnee minal lahab
(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
- 77:32
إِنَّهَا تَرْمِى بِشَرَرٍۢ كَٱلْقَصْرِ
Innahaa tarmee bishararin kalqasr
நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
- 77:33
كَأَنَّهُۥ جِمَٰلَتٌۭ صُفْرٌۭ
Ka annahoo jimaalatun sufr
நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
- 77:34
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailuny yawma 'izil lilmukazibeen
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
- 77:35
هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ
Haazaa yawmu laa uantiqoon
இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.
- 77:36
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ
Wa laa yu'zanu lahum fa ya'taziroon
அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- 77:37
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailunw yawma 'izil lilmukazzibeen
பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
- 77:38
هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ
Haaza yawmul fasli jama 'naakum wal awwaleen
இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
- 77:39
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌۭ فَكِيدُونِ
Fa in kaana lakum kaidun fakeedoon
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
- 77:40
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailuny yawma'izil lilmukazzibeen
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
- 77:41
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍۢ وَعُيُونٍۢ
Innal muttaqeena fee zilaalinw wa 'uyoon
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
- 77:42
وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ
Wa fawaakiha mimmaa yastahoon
இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
- 77:43
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
Kuloo washraboo haneee 'am bimaa kuntum ta'maloon
"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).
- 77:44
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
Innaa kazaalika najzil muhsineen
நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
- 77:45
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailuny yawma 'izil lilmuzkazzibeen
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
- 77:46
كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ
Kuloo wa tamatta'oo qaleelan innakum mujrimoon
(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
- 77:47
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailunny yawma 'izil lilmukazzibeen
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
- 77:48
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ
Wa izaa qeela lahumur ka'oo aa yarka'oon
'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
- 77:49
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailunny yawma 'izil lilmukazzibeen
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
- 77:50
فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ
Fabi ayyi hadeesim ba'dahoo yu'minoon
எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?
About Surah Al-Mursalat
Al-Mursalat, the Emissaries, opens with oaths by the winds sent forth and repeats a sobering refrain warning those who deny the truth. It points to the stages of human creation, the firm mountains, and the alternation of life as signs that the Day of Decision is real and certain.
Themes: Oaths and warning, Signs in creation, The Day of Decision, Accountability
Arabic: Uthmani script (Hafs). Translation: Tamil. Recitation: Mishary Rashid Alafasy. See Sources for full attribution.