Surah Al-A'la (undefined) is the 87th chapter of the Holy Quran. It was revealed in Mecca and contains 19 verses (ayahs). Read it below with the Arabic text, transliteration, and Tamil translation, or open it as interactive flashcards to memorize it verse by verse.
- 87:1
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى
Sabbihisma Rabbikal A'laa
(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
- 87:2
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ
Allazee khalaqa fasawwaa
அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
- 87:3
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ
Wallazee qaddara fahadaa
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
- 87:4
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ
Wallazeee akhrajal mar'aa
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
- 87:5
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ
Faja'alahoo ghusaaa'an ahwaa
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
- 87:6
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ
Sanuqri'uka falaa tansaaa
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
- 87:7
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ
Illaa maa shaaa'al laah; innahoo ya'lamul jahra wa maa yakhfaa
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
- 87:8
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
Wa nu-yassiruka lilyusraa
அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
- 87:9
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ
Fazakkir in nafa'atizzikraa
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
- 87:10
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
Sa yazzakkaru maiyakhshaa
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
- 87:11
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى
Wa yatajannabuhal ashqaa
ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
- 87:12
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ
Allazee yaslan Naaral kubraa
அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
- 87:13
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
Summa laa yamootu feehaa wa laa yahyaa
பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
- 87:14
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
Qad aflaha man tazakkaa
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
- 87:15
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
Wa zakaras ma Rabbihee fasallaa
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
- 87:16
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
Bal tu'siroonal hayaatad dunyaa
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
- 87:17
وَٱلْءَاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ
Wal Aakhiratu khairunw wa abqaa
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
- 87:18
إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ
Inna haazaa lafis suhu fil oolaa
நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-
- 87:19
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ
Suhufi Ibraaheema wa Moosaa
இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
About Surah Al-A'la
Al-A'la, the Most High, calls for glorifying the name of the Lord who created and proportioned all things, then guided them. It promises that the Prophet (peace be upon him) will be helped to remember and convey the message, and reminds the reader that the one who purifies himself and remembers his Lord will succeed, while the worldly forget what lasts.
Themes: Glorifying Allah, Purification, Remembrance, What lasts versus what fades
Arabic: Uthmani script (Hafs). Translation: Tamil. Recitation: Mishary Rashid Alafasy. See Sources for full attribution.