All Surahs

Surah Abasa (undefined)

سُورَةُ عَبَسَ

Surah 80 of the Holy Quran · Meccan · 42 verses

Also spelled: He Frowned

Surah Abasa (undefined) is the 80th chapter of the Holy Quran. It was revealed in Mecca and contains 42 verses (ayahs). Read it below with the Arabic text, transliteration, and Tamil translation, or open it as interactive flashcards to memorize it verse by verse.

  1. 80:1

    عَبَسَ وَتَوَلَّىٰٓ

    'Abasa wa tawallaa.

    அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

  2. 80:2

    أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ

    An jaa-ahul 'a-maa

    அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

  3. 80:3

    وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ

    Wa maa yudreeka la'allahu yaz zakkaa.

    (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

  4. 80:4

    أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ

    Au yaz zak karu fatanfa 'ahuz zikraa.

    அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.

  5. 80:5

    أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ

    Amma manis taghnaa

    (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-

  6. 80:6

    فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

    Fa-anta lahu tasaddaa

    நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

  7. 80:7

    وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ

    Wa ma 'alaika allaa yaz zakka.

    ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

  8. 80:8

    وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ

    Wa amma man jaa-aka yas'a

    ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

  9. 80:9

    وَهُوَ يَخْشَىٰ

    Wahuwa yakhshaa,

    அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-

  10. 80:10

    فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ

    Fa-anta 'anhu talah haa.

    அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

  11. 80:11

    كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌۭ

    Kalla innaha tazkirah

    அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

  12. 80:12

    فَمَن شَآءَ ذَكَرَهُۥ

    Faman shaa a zakarah

    எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.

  13. 80:13

    فِى صُحُفٍۢ مُّكَرَّمَةٍۢ

    Fi suhufim mukar rama,

    (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.

  14. 80:14

    مَّرْفُوعَةٍۢ مُّطَهَّرَةٍۭ

    Marfoo'atim mutah hara,

    உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.

  15. 80:15

    بِأَيْدِى سَفَرَةٍۢ

    Bi'aidee safara

    (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-

  16. 80:16

    كِرَامٍۭ بَرَرَةٍۢ

    Kiraamim bararah.

    (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

  17. 80:17

    قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ

    Qutilal-insanu maa akfarah.

    (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!

  18. 80:18

    مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ

    Min aiyyi shai-in Khalaq

    எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)

  19. 80:19

    مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

    Min nutfah; khalaqahu faqad-darah.

    (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.

  20. 80:20

    ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

    Thummas sabeela yas-sarah

    பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.

  21. 80:21

    ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ

    Thumma amatahu fa-aqbarah

    பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.

  22. 80:22

    ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

    Thumma iza shaa-a ansharah

    பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.

  23. 80:23

    كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ

    Kalla lamma yaqdi maa amarah.

    (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.

  24. 80:24

    فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ

    Falyanzuril insanu ilaa ta-amih

    எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.

  25. 80:25

    أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّۭا

    Anna sabab nalmaa-a sabba.

    நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.

  26. 80:26

    ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّۭا

    Thumma sha qaqnal-arda shaqqa.

    பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-

  27. 80:27

    فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّۭا

    Fa ambatna feeha habba

    பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.

  28. 80:28

    وَعِنَبًۭا وَقَضْبًۭا

    Wa 'inabaw-wa qadba

    திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-

  29. 80:29

    وَزَيْتُونًۭا وَنَخْلًۭا

    Wa zaitoonaw wanakh la'

    ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -

  30. 80:30

    وَحَدَآئِقَ غُلْبًۭا

    Wa hadaa-iqa ghulba

    அடர்ந்த தோட்டங்களையும்,

  31. 80:31

    وَفَٰكِهَةًۭ وَأَبًّۭا

    Wa faki hataw-wa abba.

    பழங்களையும், தீவனங்களையும்-

  32. 80:32

    مَّتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ

    Mata'al-lakum wa li-an'amikum.

    (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,

  33. 80:33

    فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

    Faiza jaa-atis saakhah.

    ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -

  34. 80:34

    يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ

    Yauma yafir-rul mar-u min akheeh

    அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

  35. 80:35

    وَأُمِّهِۦ وَأَبِيهِ

    Wa ummihee wa abeeh

    தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;

  36. 80:36

    وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ

    Wa sahi batihee wa baneeh.

    தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-

  37. 80:37

    لِكُلِّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ يَوْمَئِذٍۢ شَأْنٌۭ يُغْنِيهِ

    Likul limri-im-minuhm yaumaa-izin shaa nuy-yughneeh

    அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

  38. 80:38

    وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ مُّسْفِرَةٌۭ

    Wujoo huny-yauma-izim-musfira;

    அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.

  39. 80:39

    ضَاحِكَةٌۭ مُّسْتَبْشِرَةٌۭ

    Dahi katum mustab shirah

    சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.

  40. 80:40

    وَوُجُوهٌۭ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌۭ

    Wa wujoohuy yauma-izin 'alaiha ghabar a

    ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.

  41. 80:41

    تَرْهَقُهَا قَتَرَةٌ

    Tarhaquha qatarah.

    அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.

  42. 80:42

    أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ

    Ulaa-ika humul-kafa ratul-fajarah.

    அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.

About Surah Abasa

Abasa, He Frowned, opens by correcting a moment when a blind man seeking guidance was overlooked in favor of the powerful, teaching that sincerity matters more than status. It then points to the human's own creation and the food that grows from the earth as reasons for gratitude and humility before Allah.

Themes: Sincerity over status, Humility, Gratitude, Reflection on creation

Arabic: Uthmani script (Hafs). Translation: Tamil. Recitation: Mishary Rashid Alafasy. See Sources for full attribution.