Surah Al-Buruj (undefined) is the 85th chapter of the Holy Quran. It was revealed in Mecca and contains 22 verses (ayahs). Read it below with the Arabic text, transliteration, and Tamil translation, or open it as interactive flashcards to memorize it verse by verse.
- 85:1
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ
Wassamaaa'i zaatil burooj
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
- 85:2
وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ
Wal yawmil maw'ood
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
- 85:3
وَشَاهِدٍۢ وَمَشْهُودٍۢ
Wa shaahidinw wa mashhood
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
- 85:4
قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ
Qutila as haabul ukhdood
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.
- 85:5
ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ
Annaari zaatil waqood
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
- 85:6
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌۭ
Iz hum 'alaihaa qu'ood
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
- 85:7
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌۭ
Wa hum 'alaa maa yaf'aloona bilmu 'mineena shuhood
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
- 85:8
وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
Wa maa naqamoo minhum illaaa aiyu'minoo billaahil 'azeezil Hameed
(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
- 85:9
ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ
Allazee lahoo mulkus samaawaati wal ard; wallaahu 'alaa kulli shai 'in Shaheed
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
- 85:10
إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ
Innal lazeena fatanul mu'mineena wal mu'minaati summa lam yatooboo falahum 'azaabu Jahannama wa lahum 'azaabul hareeq
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
- 85:11
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ
Innal lazeena aamanoo wa 'amilus saalihaati lahum Jannaatun tajree min tahtihal anhaar; zaalikal fawzul kabeer
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
- 85:12
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
Inna batsha Rabbika lashadeed
நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
- 85:13
إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
Innahoo Huwa yubdi'u wa yu'eed
நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
- 85:14
وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ
Wa Huwal Ghafoorul Wadood
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
- 85:15
ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ
Zul 'Arshil Majeed
(அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன்.
- 85:16
فَعَّالٌۭ لِّمَا يُرِيدُ
Fa' 'aalul limaa yureed
தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
- 85:17
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ
Hal ataaka hadeesul junood
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
- 85:18
فِرْعَوْنَ وَثَمُودَ
Fir'awna wa Samood
ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
- 85:19
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍۢ
Balil lazeena kafaroo fee takzeeb
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
- 85:20
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ
Wallaahu minw waraaa'ihim muheet
ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
- 85:21
بَلْ هُوَ قُرْءَانٌۭ مَّجِيدٌۭ
Bal huwa Quraanum Majeed
(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
- 85:22
فِى لَوْحٍۢ مَّحْفُوظٍۭ
Fee Lawhim Mahfooz
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
About Surah Al-Buruj
Al-Buruj, the Mansions of the Stars, recalls the people of the trench who persecuted the believers for their faith, and honors those who stayed firm despite it. It reassures the believers that Allah sees everything and that the deniers face His grip, while affirming the protected, glorious nature of the Quran.
Themes: The people of the trench, Firmness under trial, Allah sees all, The glorious Quran
Arabic: Uthmani script (Hafs). Translation: Tamil. Recitation: Mishary Rashid Alafasy. See Sources for full attribution.